கவிதையே தெரியுமா? "கவிதையே தெரியுமா? என் மனதில் அவள் நினைவின் சிறுபகுதியே உன் வருகை!!" _____________________________________________________
"மஞ்சுவிரட்டு காளையின் கொம்புகளால் என்னை பதம்பார்க்க இயலவில்லை-பெண்ணே! உன் புருவங்களின் சொருகலிலே வீழ்ந்துவிட்டேன்!" _____________________________________________________
"பெண்ணே! உன் கண்களால் கொலையுண்டவன் இன்று காதலெனும் சொர்க்கவாசலிலே காத்திருக்கிறேன். இதயமெனும் சொர்க்கவாசல் திறப்பாயா! இல்லை மறுப்பாயா?" ______________________________________________________
"கண்கள் நான்கும் காதல் கொண்டு கதை நூறு பேசுமே! கள்ளத்தனம் இல்லா நெஞ்சும் கண நேரம் கூசுமே!!" _______________________________________________________
"குறிஞ்சிப் பூ பூப்பதைப் பார்ப்பது அறிதாம் பெண்ணே! நான் தான் தினம் தினம் காண்கின்றேனே உன்னை!!" ________________________________________________________
"போர்களத்தில் புறமுதுகிடாமல் முன்தொடர்ந்து செல்பவன்-என்னை உன் புறமுதுகுகாட்டி பின்தொடரச் செய்தாய்!" ________________________________________________________
"மனச்சிறையில் என்னை அடைத்துவிட்டாள், அவளை காதலித்த குற்றத்திற்காக!!" ________________________________________________________ "பாய்வது மின்னல் என்று தெரிந்தும் எதிர்க்கின்றேன், பெண்ணே! உன் வருகையின்போது." ________________________________________________________ "1ரு கலைஞன் இன்று கவிஞனாகிறேன்-பெண்ணே! கன்னி உன்னை கண்டதினாலே!!" ________________________________________________________ "காளியைக் கண்டேண் கவிதை எழுதினேன் -> ஊருக்குள் கலவரம்! கன்னியைக் கண்டேன் கவிதை எழுதினேன் ->உள்ளுக்குள் கலவரம்!!" _________________________________________________________ "என் கவிதையே! ஆணவம் கொள்ளாதே. அழகாய் இருப்பதாய் எண்ணி அந்த கன்னியின் பிரதிபலிப்புதான் நீ!! எண்ணிப்பார் அவள் எத்துனை பேரழகி என்று!!!" ________________________________________________________ "மலரே! உன்னை ரசிப்பதற்கே வந்தேன், பறிப்பதற்கல்ல!!!"